Tuesday, August 31, 2010

கிருஷ்ண ( Krishna) ஜெயந்தி


அஷ்டமி ரோஹிணியில் அவதரித்த நம்ம கிருஷ்ணன் பர்த்டே ஸ்பெஷல். துவாபர யுகத்தில் பிறந்தவனுக்கு இது எத்தனையாவது பர்த்டே என்று கணக்கு போடலாம் என்று பார்த்தேன். நமக்கு ஒன்னும் ரெண்டும் எவ்வளவு என்று கேட்டாலே கண்ணு மண்ணு தெரியாது. அரண்டு போய்டுவோம். எஸ்.வி. சேகரின் வண்ணக்கோலங்களில் வரும் "ஒரு வேலையை ஒரு ஆள் முடிக்க அஞ்சு நாள்னா.... அதே வேலையை அஞ்சு பேர் செஞ்சா..... எத்தன...." என்று இழுக்கும் போதே நாம நாலு தெரு தள்ளி ஓடிக்கிட்டு இருப்போம். அதனால இந்த கணித ஆராய்ச்சியை தனியா ஒரு பதிவுல கண்டுக்கலாம்.

சாய்ராம் கோபாலன் ரெண்டு மூனு நாள் முன்னாடி கிளப்பி விட்டது மனதிற்குள் சுவிட்ச் ஆஃப் ஆகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாளைக்கு ஜென்மாஷ்டமி. பல பேருக்கு கிருஷ்ணன் நினைவுக்கு வருகிறானோ இல்லையோ சீடை, முறுக்கு நியாபகத்தில் வாய் அசைபோட ஆரம்பித்துவிடும். பண்டிகைகள் கொண்டாடத்தானே. முன்பெல்லாம் வருடத்திற்கு ஓரிரு முறை வீடுகளில் செய்யும் பட்சணங்களை இன்று ஸ்வீட் ஸ்டால்களில் வாசலில் நிற்க வைத்து தினமும் கொடுக்கிறார்கள். நடு வாசலிலிருந்து பூஜை அறை வரை சின்ன கண்ணனுக்கு செல்லக் கால் வரைந்து, ஆலிலையில் சயனித்து கால் கட்டை விரல் கடிக்கும் கிருஷ்ணன் படத்திற்கு விதவிதமான புஷ்ப மாலைகள் அணிவித்து.....அது என்னவோ தெரியவில்லை அந்த மாயவனை, மாதவனை நினைத்தாலே மனம் சொல்லவொண்ணா ஒரு உவகை கொள்கிறது. அந்த லீலாவிநோதன் பக்தர்கள் தன் மீது கொண்ட பக்தியின் காரணமாக ஸ்ருங்கார ரஸத்தை அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவன். மீரா, ஆண்டாள் போன்றோர் பாட்டாலே பக்தி செய்தார்கள். கண்ணடித்து காதலித்தார்கள். ஏதோ என்னால் முடிந்த ஒரு பாட்டுச்ச்சரம் கண்ணபரமாத்மாவின் திருவடியில்.


இது ஒரு கதம்பம். கர்நாடிக், திரை இசை, ஃபியூஷன் என்று கண்ணனைப் பற்றி வந்த எல்லாவற்றையும் கலந்து கட்டி தந்திருக்கிறேன். எம்.எஸ் அம்மா, ஜேசுன்னா, சுதா, அருணா சாய்ராம், ஓ.எஸ். அருண் என்று பலரும் இங்கே வந்து இந்த கச்சேரி செய்கிறார்கள். அமைதியாக உட்கார்ந்து கண்ணை மூடி கேளுங்கள். கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.



இது லேட்டஸ்ட் பாஷன் கண்ணன். மார்னிங் ராகா - சுதாவோட வாய்ஸ். எக்சலேன்ட்.



எம்.எஸ். சுப்புலட்சுமி கண்கள் சொருகி பக்தி ரசத்துடன் பாடும் பொழுது, நம்மை அவனிடம் இழுத்து செல்கிறது..



பஜரே எதுனாதம்....



ஜகதோதாரண... .. ஒன்ஸ் அகையின் சுதா....



ஒ.எஸ். அருண் - பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சே.... என்ன ஒரு பாவம்... (BHAVAM).

No comments: