Saturday, November 20, 2010

Karthigai Deepam (கார்த்திகை தீப திருவிழா) - 2010

Karthigai Deepam is a festival of lights, celebrated in the Tamil month of Karthigai in English November 21th 2010. It is celebrated on the full moon day of the Karthigai month which coincides with Krithikai star.

It is celebrated in a special manner in Thiruvannamalai. Lord Shiva asks Lord Brahma and Lord Vishnu to find out the exact location of his head and his feet.


On this day, people clean the houses. In the evening, they draw kolams (rangoli) in the front of the house and also place some lamps on it. The lamps(Agal) are placed in the pooja and lighted.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.

கார்த்திகை ஓலைக்கொழுக்கட்டை

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கே உரிய பலகாரங்களில் சிறப்பான ஒன்று இது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்தன்று அநேகமாக எங்கள் வீடுகளில் இரண்டுவகைக் கொழுக்கட்டை செய்வோம். ஒன்று பிடிகொழுக்கட்டை, இன்னொன்று வேறெங்கும் கிடைக்கவே கிடைக்காத ஓலைக்கொழுக்கட்டை.



கார்த்திகையன்று கிடைக்குமோ கிடைக்காதோ என்று, முந்திய நாளே ஓலை வாங்கிவைத்துவிடுவோம். அதைச் சுத்தம்செய்து, அரையடி நீளத்துக்கு வெட்டி வைத்துக்கொள்வோம். அதில் தயாரித்த மாவை வைத்து பனையோலை நாரினால் கட்டி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து,வேகவைத்து எடுப்பார்கள். இந்தக் கொழுக்கட்டையின் மணம் மிகவும் அருமையாக இருக்கும்.

பனையோலைக் கொழுக்கட்டைக்குத் தேவையான பொருட்கள்...

பச்சரிசி மாவு - 3 கப்

சர்க்கரை அல்லது வெல்லத்தூள் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

வறுத்த பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடித்தது - 5

சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி

ஊர்ல இருந்திருந்தால் ஓலைக் கொழுக்கட்டையின் படமும் கிடைத்திருக்கும்

ஒன்லி பனையோலையின் படம் மட்டும்தான்